தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெற்றிச் செல்வன், அழகுராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மற்ற நடிகைகள் போன்று கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் தேர்ந்தெடுத்த படங்களில், போல்டான வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் தான் அறிமுகமான புதிதில் தான் சந்தித்த விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛சினிமாவுக்கு நான் அறிமுகமான புதிதில் பலர் உடலில் சர்ஜரி செய்யும்படி கூறினார்கள். அதாவது மூக்கு, மார்பகம், கன்னம், கால்கள், தொடை ஆகியவற்றை சர்ஜரி செய்து இன்னும் அழகாக மாற்றும்படி கூறினர். சிலர் தலைமுடியில் வண்ணம் தீட்ட சொன்னார்கள். இவர்கள் கூறியதை கேட்டு எனக்கு கோபம் தான் வந்தது. ஆனாலும் அதன்பிறகு எனது உடலை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கினேன்'' என்றார் ராதிகா ஆப்தே.