பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் வைஷ்ணவி பிரசாத். இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பிசியாக செயல்படும் அவர் தற்போது தனது சமூகவலைதளத்தில் ஒரு பரபரப்பான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் நான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வருகிறார். அடிக்கடி வீட்டு வாசல் வரை வந்து என்னை தொந்தரவு செய்கிறார். அந்த மர்ம இளைஞர் என்னை மிரட்டுவதைபோல பின்தொடர்ந்து வருகிறார், நான் தங்கியிருக்கும் வீட்டை அந்த வாலிபர் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக வெளியே சென்று 30 நிமிடம் வரை வீட்டுக்கு செல்லாமல் வெளியில் காத்திருந்து பின்னர் வீட்டுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். என்று அவர் கூறியிருக்கிறார்.
அதோடு பின் தொடரும் நபர் பற்றிய வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். வைஷ்ணவியின் புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இது போன்ற நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவல் உதவி என்ற செய்தியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை போலீசார் சமூக வலைதள பக்கம் மூலம் பதில் அளித்துள்ளனர்.