சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. அந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ரயில் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் பாஜ, அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம் அளித்து அவர்களை அமைதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அக்னிபத் போராட்டம் குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், அக்னிபத் திட்டம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. இந்த திட்டத்திற்கு போராட்டங்கள் வெடித்திருப்பதை வைத்து பார்க்கும்போது தேச துரோகிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள். இவர்களை பின்னால் இருந்து யாரோ இருக்கிறார்கள். இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் எப்படி நாளை நாட்டை காப்பாற்றுவார்கள். பொதுச்சொத்தை சேதப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் என்றார்.