தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த புதுமண ஜோடி தாய்லந்து சென்று தங்களது ஹனிமூனைக் கொண்டாடி பின்னர் இந்தியா திரும்பியது.
இந்தியா வந்ததுமே நயன்தாரா மும்பைக்குச் சென்றுவிட்டாராம். இன்று முதல் ஷாரூக்கான் நடிக்கும் 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 20 நாட்களுக்கு மும்பையில் தங்கியிருந்து தனது படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கப் போகிறாராம்.
அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தின் பாடல் காட்சிகளில் நடிக்க கலந்து கொள்வாராம். நயன்தாராவின் அபிமான இயக்குனராக அட்லீ இயக்கும் இந்தப் படம் மூலம் நயன்தாரா ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார்.
பொதுவாக பாலிவுட்டில் மிகவும் இளம் வயதில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்வார்கள். ஆனால், நயன்தாரா திருமணத்திற்குப் பிறகே பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.