இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் மீனாவின் கணவர் மறைவு குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்தது. நுரையீரல் பிரச்சனை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். வாழ்க்கை மிகவும் குரூரமானது என்பதை இந்த இறப்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மீனாவையும் அவரது மகள் நைனிகாவையும் நினைத்து என் மனசு வலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, இன்னொரு பதிவில் இந்த விஷயத்தில் ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மீனாவின் கணவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக அவர் இறந்துள்ளார். அதனால் தயவு செய்து அவர் கொரோனாவால் இருந்ததாக யாரும் தவறான தகவலை வெளியிட்டு மக்களை அச்சுறுத்த வேண்டாம். அதோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம் தான் இருப்பினும் தயவு செய்து மக்களை பயமுறுத்தும் வகையில் செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து இருக்கிறார் குஷ்பு.