தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர். இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா 2022 போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.
தமிழில் 'அன்பறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். மூன்றாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் ஷிவானி, மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.
விலகலுக்கான காரணம் குறித்து ஷிவானி, “எனது மருத்துவப் படிப்பின் எழுத்துத் தேர்வுகள் மற்றும் மலேரியாவால் நான் பாதிக்கப்பட்ட காரணத்தால் பெரும்பாலான அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை என்னால் சரிவர செய்ய முடியவில்லை. மீண்டும் நலம் பெற்றுத் திரும்பி வருவேன். எனக்கேற்றபடி எதுவும் நடக்கவில்லை. எனது பிராக்டிக்கல் தேர்வுகள் திடீரென ஜுலை 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது,” என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான அழகுப் போட்டியில் கலந்து கொள்வேன் என்றும் ஷிவானி மேலும் தெரிவித்துள்ளார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் ஷிவானி தமிழ்நாடு சார்பாகத்தான் இந்த அழகுப் போட்டியில் கலந்து கொள்ள இருந்தார். தற்போது அவர் போகாத காரணத்தால் இந்த வருடம் தமிழ்நாடு சார்பில் யாரும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.