புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. தற்போது இப்படத்திற்காக அம்ரிட்சரில் 1000 பேருடன் ராம்சரண், கியாரா நடனமாட ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறதாம். அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம். 20 நாட்கள் வரை நடைபெற உள்ள அந்த படப்பிடிப்பில் 1200 ஸ்டன்ட் நடிகர்களை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
இப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகுதான் 'இந்தியன் 2' படத்தை இயக்க ஷங்கர் மீண்டும் வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.