நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை |
பிரபல கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்(80) ராஜ்யசபாக எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள கொவ்வூர் என்ற ஊரில் பிறந்தவர் இவர். ஜானகி ராமுடு என்ற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமான இவர் சத்ரபதி, மகதீரா, பாகுபலி 1,2, ஆர்ஆர்ஆர், பஜ்ரங்கி பைஜான், மெர்சல், மணிகர்னிகா, தலைவி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதி உள்ளார். ஓரிரு படங்களை இயக்கியும் உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், மகனின் வெற்றி படங்களுக்கு கதையில் முக்கிய பங்காற்றி உள்ளார்.
இந்நிலையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ராஜ்யசபாவிற்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன் அடிப்படையில் விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும், அரசியல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.