நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கேரளாவை சேர்ந்தவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‛கும்கி' படத்தில் பாரஸ்ட் ஆபிசராக நடித்தார். தொடர்ந்து வேட்டை, கதகளி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற சிறுமியர்கள் முன்பு காரில் இருந்தபடி தனது ஆடையை கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். ஆனால் அந்த நபர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சிசிடி காட்சிகளின் அடிப்படையில் காரை அடையாளம் கண்ட போலீசார் அந்த நபர் நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிப்பட்டதை தொடர்ந்து குழந்தைகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஸ்ரீஜித் ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஸ்ரீஜித் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளாராம். கடந்த 2016ம் ஆண்டும் இதே மாதிரியான வழக்கு ஒன்றில் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.