பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டீசரின் பிரம்மாண்டமான காட்சிகளுக்கும் பின்னணி இசைக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டு கிடைத்து வருகிறது. அதிலும் டீசரில் இடம் பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பிரமாதமாக இருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
சோழர் காலத்து கதையில் உருவாகி இருப்பதால் அந்த காலகட்டத்தின் இசைக்கருவிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேகரித்து அதற்கான பின்னணி இசையை ரகுமான் அமைத்திருப்பதாக படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. முக்கியமாக சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பம்பை, உடுக்கை, உருமி, தம்பட்டம், கொம்பு, பஞ்சமுக வாத்தியம் உள்பட பல இசைக்கருவிகளை இந்த படத்தின் பின்னணி இசையில் பயன்படுத்தியுள்ளார் ரகுமான். ஆனால் சோழர் காலத்தைச் சார்ந்த பல இசைக்கருவிகள் தமிழகத்தில் கிடைக்காத நிலையில் சில இசை கருவிகளை தாய்லாந்து நாட்டில் வாங்கி வந்து பின்னணி இசை அமைத்திருக்கிறார். இப்படி சோழர் காலத்தை திரை வடிவப்படுத்தி இருக்கும் மணிரத்னத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை வாங்கி வந்து முழுக்க முழுக்க ஒரிஜினல் கருவிகளை வைத்தே பின்னணி இசை அமைத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான்.