ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
தமிழை விட தெலுங்கில் நிறைய புதுமுக நாயகிகள், வளரும் நாயகிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. கடந்த இரண்டு வருடங்களாக கொரானோ தாக்கத்தால் பல புதிய படங்கள் ஆரம்பிக்காத நிலையில் அறிமுக நடிகைகள் வருவதும் குறைந்துள்ளது.
தெலுங்கில், “டாக்சிவாலா, திம்மருசு, எஸ்ஆர் கல்யாண மண்டபம், கமனம்” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரியங்கா ஜவல்கர். பேஷன் டிசைனிங் படித்து முடித்து பின்னர் அமெரிக்கா சென்று வேலை பார்த்து வந்தவர். சமூக வலைத்தளத்தில் அவருடைய புகைப்படங்களைப் பார்த்து நடிக்க அழைத்து தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டார்.
சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் சாட் செய்த பிரியங்காவிடம் ஒரு ரசிகர், “கோலிவுட்டில் உங்களுக்கு யார் மீது ஆசை” எனக் கேட்டதற்கு, “எப்போதுமே தனுஷ், இப்போது சிம்புவையும் சில காரணங்களுக்காகக் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இருவருமே அழகானவர்கள்,” என்று பதிலளித்திருக்கிறார்.
தங்களைப் பிடிக்கும் எனச் சொன்ன பிரியங்காவிற்கு தனுஷ், சிம்பு இருவரில் யார் நடிக்க வாய்ப்பு கொடுக்கப் போகிறார்கள்?.