பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் பகாசூரன் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரிக்க, சாம் இசையமைத்து வருகிறார். பகாசூரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் சிவன் பாடலுக்கு செல்வராகவன் முதன் முதலாக நடனம் ஆடியுள்ளார். இதற்காக உரிய பயிற்சி பெற்று நடனம் அடி உள்ளார் செல்வராகவன்.

டப்பிங் ஆரம்பம்
இது ஒருபுறம் இருக்க செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது . தற்போது இந்த படத்தின் மற்ற பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் ட்ரைலர் தயாராக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை செல்வராகவன் தொடங்கியுள்ளார். அவர் நடித்த காட்சிகளுக்காக டப்பிங் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். செப்., 30ல் இந்த படம் திரைக்கு வர உள்ளது.