மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து, நடித்த ‛விக்ரம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஏற்கனவே தான் நடித்து சூப்பர் ஹிட் ஆன சில படங்களின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், விக்ரம் படத்தை அடுத்து மலையாளத்தில் மாலிக் உட்பட பல படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல்.
இந்த படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்திற்கு அனிருத் சிறப்பாக இசையமைத்திருந்ததால் கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கும் அவர் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மலையாள சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும் சுசின் ஷ்யாம் என்பவர் இசையமைக்க இருக்கிறாராம்.
அந்த வகையில் கமலின் புதிய படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளரும் மலையாள சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோன்று விக்ரம் படத்தில் பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என சில மலையாள நடிகர்கள் நடித்தது போன்று கமலின் புதிய படத்திலும் மலையாளத்தில் பிரபலமான சில நடிகர்கள் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.