பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஆஹா கல்யாணம் என்கிற வெப்தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அதனால் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவை அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து விட்டார் பார்த்நதிபன். அதோடு படத்தில் நிர்வாணமாகவும் நடித்திருக்கிறார் பிரிகிடா.
இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: துணை இயக்குனராக சென்ற என்னை பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடிக்கச் சொல்லிவிட்டார். முதலில் தயங்கினேன் பிறகு கதையும், அதற்கான முயற்சியும் என்னை சம்மதிக்க வைத்தது. கதைக்கு ஒரு நிர்வாண காட்சி தேவை அதை உன்னை போன்ற சினிமாவை நேசிக்கத் தெரிந்த ஒருவரால் தான் நடிக்க முடியும் என்றார். ஆனால் இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு சற்று நெருடலாக இருந்தது.
இருவருமே எனது பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் சம்மத்தின் பேரில் நடித்தேன். அப்படி நடிப்பதற்கு பல டெக்னிக்கல் விஷயங்கள் இருந்தன என்றாலும் கதைப்படி அது நிர்வாண காட்சி தான். படத்தில் பார்க்கும் போது அது கவர்ச்சியாக தெரியாது, அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என்கிறார் பிரிகிடா.