பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி சீனியர் இசையமைப்பாளர்களில் ஒருவர் கீரவாணி. 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் சமீபத்தில் அவர் இசையமைத்து வெளிவந்தவை. தமிழில் மரகதமணி என்ற பெயரில் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
நேற்று அவர் இசையமைப்பாளர் அனிருத்தைப் பாராட்டி ஒரு பதிவிட்டுள்ளார். “டான்' படத்தில் இடம் பெற்றுள்ள 'பே' பாடல் போதை தரக் கூடியது. அனிருத் எப்போதுமே புதுமையானவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அனிருத், “லவ் யூ சார்” என நன்றி தெரிவித்துள்ளார்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விக்னேஷ் சிவன் எழுதி, ஆதித்யா ஆர்கே பாடியுள்ள பாடல் தான் 'பே'. சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் இந்த ஆதித்யா. சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் மீரா கிருஷ்ணனின் மகன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அரை இறுதியில் வெளியேற்றப்பட்டவர். இருப்பினும் இந்த 'பே' பாடல் அவரை சினிமா புகழின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தெலுங்கிலும் இந்தப் பாடலை ஆதித்யாவே பாடியுள்ளார்.
'பே' பாடலின் லிரிக் வீடியோ யு டியூபில் 47 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் வீடியோ பாடல் 10 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 'டான்' படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகி படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.