2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

மலையாள நடிகர்களில் தனது வித்தியாசமான கதை தேர்வால் மலையாள திரையுலகை மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகிலும் சேர்த்து ஒருவித ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய உள்ளவர் நடிகர் பஹத் பாசில். அதன் விளைவுதான் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் அவர் நடித்த புஷ்பா மற்றும் விக்ரம் படங்கள் ஹிட்டானதுடன் தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகராகவும் மாறியுள்ளார் பஹத் பாசில்.
இந்த நிலையில் மலையாளத்தில் அவர் நடித்துள்ள மலையான் குஞ்சு என்கிற திரைப்படம் ஜூலை-22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சஜிமோன் பிரபாகரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். முப்பது வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படம் இது. இந்தப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள சோளப்பெண்ணே என்கிற லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா கூறும்போது, “பஹத் பாசில், நீங்கள் எப்போதுமே உங்களுடைய கதைகளால் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.. மலையான் குஞ்சு படத்தின் ட்ரெய்லரை பார்த்து வியந்தேன்.. உண்மையிலேயே வித்தியாசமான ஒரு முயற்சி” என்று பாராட்டி உள்ளதோடு இந்த படத்தை தயாரித்த இயக்குனர் பாசிலுக்கு தன் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.