இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கார்கி' படம் ரசிகர்களின் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் பிறகுதான் படம் மீதான பார்வை ரசிகர்களிடம் ஏற்பட்டது. படம் வெளியான பின் இரு தினங்களுக்கு முன்பு சூர்யா இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். “நீண்ட காலத்திற்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறப்பாக எழுதப்பட்ட, சிறப்பாக உருவாக்கப்பட்ட படம். நலம் விரும்பிகள், ரசிகர்கள், மீடியா என அனைவரிடமும் அன்பையும் மரியாதையையும் படக்குழு பெற்றுவிட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ள சாய் பல்லவி, “அனைத்திற்கும் நன்றி சார். உங்கள் உதவியால் தான் கார்கி பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது. இதற்காக ஜோதிகா மேடத்திற்கும் நன்றி சொல்லுங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.