ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தொடங்குகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமந்தா கலந்து கொள்கிறார். இதற்கான அறிவிப்பை விழாக்குழு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சமந்தா கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டே இந்த விழாவில் நான் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். அப்போது கலந்து கொள்ள இயலவில்லை. இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய மக்களையும், ரசிகர்களையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இந்திய சினிமாவை அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் இந்தியர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகிய இரு சமூகங்களும் ஒருமனதாக ஒன்றாகக் கொண்டாடுவது ஒரு உற்சாகமான உணர்வு. என்கிறார் சமந்தா.
விழா இயக்குனர் மிது பௌமிக் லாங்கே கூறியதாவது: சமந்தாவுக்கு ஆஸ்திரேலியாவில் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். அவர் படவிழாவின் ஒரு பகுதியாக இருப்பார். அவரை நாங்கள் கொண்டாடுவோம். இந்த ஆண்டு விழாவில் அவரது பணிக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்று தெரிவித்துள்ளார்.