இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
செஸ் வீரர் பிரக்ஞானந்தா கடந்த 2018ம் ஆண்டு கிரான்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி, மே மாதங்கள் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்லிசனை வீழ்த்தி சாதனை படைத்தார். ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியா தொடரிலும் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் இன்று தனது குடும்பத்தாருடன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார் பிரக்ஞானந்தா. அப்போது செஸ் ஒலிம்பியா தொடரிலும் அவர் வெற்றி பெற வாழ்த்திய ரஜினிகாந்த், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அதையடுத்து ரஜினிக்கு பிரக்ஞானந்தாவும் செஸ் போர்டு ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து, "மறக்க முடியாத நாள் இன்று. ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன். எவ்வளவோ உயரங்களை அடைந்த போதும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி## என்று பதிவிட்டுள்ளார் பிரக்ஞானந்தா.