இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
எஸ்.பி.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்துள்ள படம் ‛ஜோதி'. ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா இயக்கி உள்ளார். இதில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா க்ரூப், குமரவேல், சாய்பிரியங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ள படம். கடலூர் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் பிறந்த குழந்தையை இன்னொரு பெண் திருடிச் சென்றார். டி.எஸ்.பி சாந்தி என்ற போலீஸ் அதிகாரி 2 மணிநேரத்தில் குழந்தையை மீட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. குழந்தை கடத்தலின் பின்னணியில் இருப்பது யார். எதற்காக கடத்துகிறார்கள் என்கிற உண்மைகளை படம் பேசப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.