படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்குத் திரையுலகத்தில் வெளியாகும் புதிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான கால அளவை மாற்றி அமைத்துள்ளது தெலுங்கு திரைப்பட சேம்பர் ஆப் காமர்ஸ். அதன் கூட்டம் நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. அப்போது ஓடிடி வெளியீடுகள், டிக்கெட் கட்டண விவகாரம், விபிஎப் கட்டணம், தயாரிப்பு செலவு உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் தியேட்டர்காரர்கள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், புதிய படங்களின் உடனடி ஓடிடி வெளியீடு காரணமாக தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்துள்ளதாகவும் கூட்டத்தில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் புதிய நிபந்தனைகளை கூட்ட முடிவில் எடுத்துள்ளனர்.
பெரிய பட்ஜெட் படங்களை 8 வாரங்களுக்குப் பிறகும், சிறிய பட்ஜெட் படங்களை நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்ற ஆலோசனையை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளார்களாம்.
மேலும், போலியான வசூல் விவரங்களை சில முன்னணி நடிகர்கள் வெளியிடுவது குறித்தும் கூட்டத்தில் விவாதித்துள்ளார்கள். அதன் மூலம் நடிகர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.