இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'நான் ஈ' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் கன்னட நடிகரான சுதீப். அதன்பின் விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்தார். 'முடிஞ்சா இவன புடி' என்ற படத்திலும் நாயகனாக நடித்தார். கடைசி இரண்டு படங்களும் தோல்விப் படங்களாகத்தான் அமைந்தன.
தற்போது அவர் 'விக்ராந்த் ரோணா' என்ற கன்னடப் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து அதை பான்--இந்தியா படமாகவும் நாளை(ஜூலை 28) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார். ஒரு பான்--இந்தியா படமாக வெளிவந்தாலும் கன்னடத்தைத் தவிர மற்ற மொழிகளில் இந்தப் படம் எந்தவிதமான பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.
கன்னடத்தில் தயாராகி பான்--இந்தியா படமாக வெளிவந்த படங்களில் 'கேஜிஎப்' படங்கள் மட்டுமே இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து வெளிவந்த '777 சார்லி' படத்திற்கும் இங்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. சுதீப் நடித்துள்ள 'விக்ராந்த் ரோணா' படத்திற்கு மேலே சொன்ன இரண்டு படங்களுக்கும் இடையிலான சுமாரான வெற்றியாவது கிடைக்குமா என்பது நாளை தெரியும்.