தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழிலும் இந்தியிலும் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிவிட்ட இயக்குனர் ஷங்கர் தற்போது முதல்முறையாக தெலுங்கு திரை உலகில் அடி எடுத்து வைத்து, இளம் முன்னணி நடிகரான ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியின் நகராட்சி அதிகாரியான அகுலா ஸ்ரீவாணி என்பவர் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு தடை விதித்ததுடன் பள்ளிக்கூடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாணவர்களின் படிப்பு பாழாகும் விதமாக படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல இப்படி பள்ளியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.