தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாகுபலி திரைப்படம் இயக்குனர் ராஜமவுலி படம் என்பதால் மட்டுமே பான் இந்திய திரைப்படம் என்கிற அளவில் ரிலீசானது. அதேசமயம் அதற்கு அடுத்ததாக வெளியான கேஜிஎப், புஷ்பா போன்ற திரைப்படங்கள் படத்தின் ஹீரோவை முன்னிலைப்படுத்தியே பான் இந்தியா ரிலீஸாக வெளியாகின. அப்படி வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா படத்தின் முதல் பாகமாக வெளியான புஷ்பா தி ரைஸ் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தையும் அதே அளவிற்கு வெற்றி பெற செய்யும் விதமாக, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து உருவாக்கி வருகிறார்கள் இயக்குனர் சுகுமாரும், அல்லு அர்ஜுனும்.. இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனாவும் இணைந்திருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் சுகுமாரும் உப்பென்னா இயக்குனரும் இணைந்து திரைக்கதை பற்றி விவாதிப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.