பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா |

பாகுபலி திரைப்படம் இயக்குனர் ராஜமவுலி படம் என்பதால் மட்டுமே பான் இந்திய திரைப்படம் என்கிற அளவில் ரிலீசானது. அதேசமயம் அதற்கு அடுத்ததாக வெளியான கேஜிஎப், புஷ்பா போன்ற திரைப்படங்கள் படத்தின் ஹீரோவை முன்னிலைப்படுத்தியே பான் இந்தியா ரிலீஸாக வெளியாகின. அப்படி வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா படத்தின் முதல் பாகமாக வெளியான புஷ்பா தி ரைஸ் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தையும் அதே அளவிற்கு வெற்றி பெற செய்யும் விதமாக, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து உருவாக்கி வருகிறார்கள் இயக்குனர் சுகுமாரும், அல்லு அர்ஜுனும்.. இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனாவும் இணைந்திருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் சுகுமாரும் உப்பென்னா இயக்குனரும் இணைந்து திரைக்கதை பற்றி விவாதிப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.




