தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி போன்ற படங்களில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. தற்போது கன்னடத்தில் அபிஷேக் பசந்த் என்பவர் இயக்கி வரும் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சண்டைக் காட்சியில் நடித்த போது கீழே விழுந்த சம்யுக்தாவின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்யுக்தாவின் காலில் தசை பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதனால் சில நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இந்த சண்டை காட்சிகள் சம்யுக்தா ஹெக்டே நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு மருத்துவமனையில் காலில் கட்டு போடப்பட்ட நிலையில் அவர் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.