திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
விஜய், தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் முதன்முறையாக பிரின்ஸ் என்கிற நேரடியாக தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஜதி ரத்னாலு என்கிற படத்தை இயக்கிய கே.வி.அனுதீப் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரிஷபோப்ஷகா நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் என இருமொழி படமாக உருவாகும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை கடந்த நான்கு நாட்களாக பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படமாக்கி வந்தனர். இந்த நிலையில் பாடல் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக விட்டாலும் இத்துடன் கிட்டத்தட்ட மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.