விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மல்லிகா ஷெராவத் . தமிழில் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் வில்லியாக நடித்தவர், சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதோடு ஜாக்கி சான் நடித்த ஹாலிவுட் படத்திலும் நடித்தார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் ஆர்கே என்றொரு படத்தில் நடித்துள்ளார் மல்லிகா ஷெராவத். இந்த நிலையில் ஹீரோக்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என்று ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.
மல்லிகா கூறுகையில், ‛‛ஹீரோக்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நடிகைகளை தான் விரும்புகிறார்கள். எந்த நடிகை அவர்களுடன் சமரசம் செய்கிறாரோ அவருக்கு வாய்ப்பு. அவர் உட்காரு, எழு என்று எது சொன்னாலும் செய்ய வேண்டும். நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்தாலும் செல்ல வேண்டும். அப்படி சென்றால் அவர்களுக்கு பட வாய்ப்பு இருக்கும். நான் இதுபோன்ற சமரசங்களுக்கு உடன்பட மாட்டேன். இதனால் பட வாய்ப்புகளை இழந்தேன். ஆனாலும் தொடர்ந்து நான் படங்களில் நடிக்கிறேன்'' என்கிறார்.
மல்லிகா வெளிப்படையாக தெரிவித்துள்ள இந்த கருத்து பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.