இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'டான்' படம் வியாபார ரீதியில் லாபமான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' படம் அவரது அடுத்த வெளியீடாக அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும் போதே கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது 21 படம் பற்றிய அறிவிப்பும் பொங்கல் தினத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஏழு மாதங்களாகியும் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இதனிடையே, சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமாக 'மாவீரன்' படத்தின் அறிவிப்பைக் கடந்த மாதம் வெளியிட்டார்கள். ஆனால், சிவகார்த்திகேயனின் எத்தனையாவது படம் என அறிவிக்காமல், சிவகார்த்திகேயயின் அடுத்த படம் என்றே அறிவித்தார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று(ஆக., 3) முதல் ஆரம்பிக்க உள்ளார்களாம்.
அப்படி என்றால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த சிவகார்த்திகேயன் 21வது படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்களாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதற்குள் அடுத்த படத்திற்கு சிவகார்த்திகேயன் சென்றுவிட்டது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.