‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு |
சின்னத்திரை மற்றும் சினிமா நடிகையான ஜெயலட்சுமி தனது பெயரை பயன்படுத்தி பண வசூல் செய்து வருவதாக சினிமா பாடலாசிரியரான சினேகன் புகார் கூறியுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் 'சினேகம் பவுண்டேசன்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். எனது அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை சட்டத்திற்கு உட்பட்டு செய்து வருகிறேன். சமீபகாலமாக எனது அறக்கட்டளை பெயரை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தியும், தான் தான் 'சினேகன் அறக்கட்டளை' நிறுவனர் என்று கூறியும் நிதி வசூலித்ததாக பல புகார்கள் வந்தது.
நான் பொதுமக்களிடம் பொது வெளித்தளங்கள் மூலம் இதுவரை எந்த நிதியும் திரட்டவில்லை. ஜெயலட்சுமி எனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்ததாக வருமான வரித்துறை எனது கவனத்துக்கு கொண்டு வந்தது.
எனது அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொதுமக்களிடம் பறிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மேலும், அந்த போலியான இணைய தளத்தை முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.