மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கடமையை செய். வருகிற 12ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் கூறியதாவது: பல போராட்டங்களுக்கு பிறகு இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகிறது. முதன்முதலில் இந்த படக்கதையை என்னிடம் கூற வந்த போது என்னால் இந்த பாத்திரத்தை பண்ண முடியுமா? என பயந்தேன். ஆனால் செட்டில் இயக்குனர் என்னை சிறப்பாக நடிக்க வைத்தார்.
எனக்கு ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற அடையாளம் இருக்கிறது, அது இந்தப்படம் மூலம் மாறும். இந்த படத்தில் நான் பெரிய உழைப்பை கொடுத்துள்ளேன். இனிமேல் எனக்கு நிறைய நல்ல படங்கள் வருமென நம்புகிறேன். ஒளிப்பதிவாளர் உடைய ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கும். இந்த படம் ஒரு பேமிலி எண்டர்டெயினர் ஆக இருக்கும். என்றார்.