சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு. அதாவது பவள விழா ஆண்டு. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதனை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அதோடு தனது சமூக வலைத்தள கணக்கின் டிபியில் தேசிய கொடியை பதிவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து டிபியில் தேசிய கொடியை பதிவிடுவது வைரலாகி சாதாரண பொதுமக்கள் முதல் பிரதமர் வரை தேசிய கொடியை டிபியில் வைத்து வைரலாக்கினார்கள், கேரளாவில் முன்னணி மலையாள நடிகர்கள் டிபியில் தேசிய கொடியை வைத்து முன்னோடியாக நிகழ்ந்தார்கள்.
மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, உன்னி முகுந்தன், பின்னணி பாடகி சித்ரா உள்பட பலரும் டிபியில் தேடிய கொடியை வைத்துள்ளனர். ஆனால் தமிழ் நாட்டில் செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட ஓரிரு நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற திரைநட்சத்திரங்கள் செய்யவில்லை. "உங்கள் கும்பகர்ண தூக்கம் போதும் நாட்டுக்காக கொஞ்சம் விழித்திருங்கள்" என்று நெட்டிசன்கள் தமிழ் ஹீரோக்களை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.