பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. நடுவர்களின் சிறப்பு விருதாக அந்த விருது இருந்தது. இந்த நிலையில் தேசிய விருது குறித்து பார்த்திபன் தனது ஸ்டைலில் கிண்டலாக ஒரு பதிவு போட்டுள்ளார்.
அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தை பார்த்துவிட்டு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதோடு, ''தேசிய விருதுக்கா? என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால் ''மோடிஜீக்கு ஜே" என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது. தேசிய விருது மீது நம்பிக்கை இல்லாவிட்டால் வாங்கிய விருதை திருப்பிக் கொடுங்கள் என்றும், எதற்கெடுத்தாலும் பிரதமர் பெயரை இழுத்து அவரை அவமானப்படுத்தும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.