'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
நீண்டநாள் காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில தினங்களில் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அதன்பின் அவரவர் பணியில் பிஸியாக இருந்தனர். நயன்தாரா ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் நடிக்கும் ஜவான் பட படப்பிடிப்பில் பங்கேற்றார்.
விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் துவக்க மற்றும் இறுதி விழா நிகழ்ச்சிகளை கலை நிகழ்ச்சிகளை முன்னின்று கவனித்து வந்தார். அவை வெற்றிகரமாக முடிந்து அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஓய்விற்காக ஸ்பெயின் பறந்துள்ளனர். ஸ்பெயினில் 10 நாட்கள் தங்குகின்றனர். பிறகு சென்னை திரும்புகின்றனர். அட்லீ இயக்கும் ஜவான் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்கிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் இயக்கவிருக்கும் புதிய படத்தின் பணிகளைத் துவங்க இருக்கிறார்.
என்ன மீண்டும் ஒரு ஹனிமூன் கொண்டாட்டாமா என ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.