2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று நம் நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி அவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டிலேயே இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளார்கள்.
தனது சமூக வலைதளத்தில் தாங்கள் தேசிய கொடியை ஏந்தி நிற்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆடியோவையும் ஒலிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் 75வது சுதந்திர தின வாழ்த்துகள். இந்த நாளை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடுவோம். ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட வேண்டும். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சுதந்திரமான ஜனநாயக மற்றும் மகிழ்ச்சியான வீடு என்றால் நம்முடைய இந்திய நாடு தான் என்று அவர் ஒரு பதிவும் போட்டு உள்ளார்.