முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று நம் நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி அவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டிலேயே இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளார்கள்.
தனது சமூக வலைதளத்தில் தாங்கள் தேசிய கொடியை ஏந்தி நிற்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆடியோவையும் ஒலிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் 75வது சுதந்திர தின வாழ்த்துகள். இந்த நாளை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடுவோம். ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட வேண்டும். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சுதந்திரமான ஜனநாயக மற்றும் மகிழ்ச்சியான வீடு என்றால் நம்முடைய இந்திய நாடு தான் என்று அவர் ஒரு பதிவும் போட்டு உள்ளார்.