பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்திருக்கிறார் பிரியங்கா மோகன். அதோடு தற்போது ராஜேஷ் எம்.இயக்கும் ஜெயம் ரவியின் 30-வது படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் ஊட்டியில் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறப் போகிறது. அண்ணன்- தங்கை பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் நட்டி நடராஜ், விடிவி.கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.