ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பிரபல எடிட்டர் மோகனின் மகன் ரவி. தெலுங்கு படங்களை வாங்கி அதை டப் செய்து வெளியிட்டு வந்த மோகன், தெலுங்கில் ஹிட்டான 'ஜெயம்' படத்தை வாங்கி அதில் தன் மகன் ரவியை நாயகனாகவும், இன்னொரு மகன் ராஜாவை இயக்குனராகவும் அறிமுகப்படுத்தினார். படம் பெரிய வெற்றி பெறவே இருவரும் அவரவர் துறையில் வேகமாக முன்னேறினார்கள்.
தற்போது ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில் “திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இந்த மைல் கல்லை அடைந்து இருப்பதை அளவில்லாத நன்றி உணர்வுகளோடு கொண்டாடுகிறேன். என்மீது அன்பு வைத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'ஜெயம்' படத்தில் இருந்து 'பொன்னியின் செல்வன்' படம் வரை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் அளித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கும் எனது 20 ஆண்டுகால பயணத்தில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
25 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஜெயம்ரவி கடைசியாக பொன்னியின் செல்வனில் அருண்மொழி வர்மனாக நடித்திருந்தார். தற்போது சைரன், இறைவன், மற்றும் பெயரிடப்படாத தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.