ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல எடிட்டர் மோகனின் மகன் ரவி. தெலுங்கு படங்களை வாங்கி அதை டப் செய்து வெளியிட்டு வந்த மோகன், தெலுங்கில் ஹிட்டான 'ஜெயம்' படத்தை வாங்கி அதில் தன் மகன் ரவியை நாயகனாகவும், இன்னொரு மகன் ராஜாவை இயக்குனராகவும் அறிமுகப்படுத்தினார். படம் பெரிய வெற்றி பெறவே இருவரும் அவரவர் துறையில் வேகமாக முன்னேறினார்கள்.
தற்போது ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில் “திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இந்த மைல் கல்லை அடைந்து இருப்பதை அளவில்லாத நன்றி உணர்வுகளோடு கொண்டாடுகிறேன். என்மீது அன்பு வைத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'ஜெயம்' படத்தில் இருந்து 'பொன்னியின் செல்வன்' படம் வரை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் அளித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கும் எனது 20 ஆண்டுகால பயணத்தில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
25 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஜெயம்ரவி கடைசியாக பொன்னியின் செல்வனில் அருண்மொழி வர்மனாக நடித்திருந்தார். தற்போது சைரன், இறைவன், மற்றும் பெயரிடப்படாத தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.