ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜோசப் பேபி என்பவர் தமிழக அரசியலில் நேர்மையாக வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து, அதில் அவர் கக்கனாக நடித்தும் இருக்கிறார். அவரே திரைக்கதை, வசனத்தையும் எழதியிருக்கிறார். ஏ.எஸ்.சந்தோஷ்ராமா இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து ஜோசப் பேபி கூறியதாவது : கக்கன் மீது மாறாத பற்று கொண்டவன் நான். அவரது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பதாற்காக கடந்த 30 வருடங்களாக பணம் சேர்த்து வந்தேன். பிரபல நடிகர்கள் நடித்தால் அவர்கள் முகம்தான் தெரியும், கக்கன் பின்னனுக்கு தள்ளப்படுவார் என்பதால் நானே கக்ககான நடித்தேன். எல்லா பணிகளையும் நானே செய்ய முடியாது என்பதால் இயக்கும் பொறுப்பை இன்னொருவருக்கு கொடுத்தேன்.
இன்றைய தலைமுறையினருக்கு கக்கன் பற்றித் தெரியாது. இந்த படத்திற்கு பிறகு அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வார்கள். அரசியலுக்கு வரும் ஆசை ஏற்பட்டால் அவரையே முன்மாதிரியாக கொள்வார்கள். படத்தை விரைவில் வெளியிட இருக்கிறேன். இதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை கக்கன் குடும்பத்திற்கு வழங்க இருக்கிறேன். என்றார்.