ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் எஸ்.தாணு. இவரது வி கிரியேஷன் அலுவலகம் தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ளது. சில இளைஞர்களும், பெண்களும் வி கிரியேஷன் அலுவலத்திற்கு சென்று அதன் இணை இயக்குனர் ஜெகதீசனை சந்தித்து எங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பணம் வாங்கினீர்கள், ஆனால் பல மாதங்களாக எங்களை அழைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதர்ச்சி அடைந்த ஜெகதீசன் எங்கள் நிறுவனம் சார்பில் எந்த படத்திற்கும் நடிகர், நடிகை தேர்வு நடத்தவில்லை, இதற்காக எந்த விளம்பரமும் செய்யவில்லை என்றார். இதை தொடர்ந்து வந்தவர்களின் பணம் பெற்ற நபர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் ஜெகதீசன் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வி கிரியேஷன் பெயரில் போலியான விளம்பரம் செய்து இதுபோன்று பல நபர்களிடம் ஒரு கும்பல் பணமோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும், யாராவது எங்கள் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு பேசினால் தகவல் தெரிவிக்குமாறும் வி கிரியேஷன் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.