கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி விட்டார். அதன் பிறகு அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகி விட்டார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் படங்களுக்கு பிறகு அவரது நடிப்பில் அயலான், பிரின்ஸ் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தியுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . காரணம் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி சிவகார்த்திகேயன், ஆர்த்தி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் அவர்கள் இன்று 12வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு, ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள்.