கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இதில் ஆண்ட்ரியா, நாகா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய மிஷ்கின் “நிர்வாண காட்சிகள் படமாக்கப்படவில்லை போட்டோக்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அதையும் நான் பார்க்கவில்லை. பிசாசு படத்தை குழுந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நிர்வாண காட்சியை பயன்படுத்தினால் ஏ சான்றிதழ்தான் கிடைக்கும், குழந்தைகள் பார்க்க முடியாது என்பதால் அந்த காட்சியை படத்தில் வைக்கப்போவதில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ்தான் தரமுடியும், பயமுறுத்தும் வன்முறை காட்சிகள் இருக்கிறது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி குறைந்தபட்சம் யுஏ சான்றிதழாவது தாருங்கள் என்று மேல்முறையீடு செய்ய இருக்கிறார்களாம்.