தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இதில் ஆண்ட்ரியா, நாகா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய மிஷ்கின் “நிர்வாண காட்சிகள் படமாக்கப்படவில்லை போட்டோக்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அதையும் நான் பார்க்கவில்லை. பிசாசு படத்தை குழுந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நிர்வாண காட்சியை பயன்படுத்தினால் ஏ சான்றிதழ்தான் கிடைக்கும், குழந்தைகள் பார்க்க முடியாது என்பதால் அந்த காட்சியை படத்தில் வைக்கப்போவதில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ்தான் தரமுடியும், பயமுறுத்தும் வன்முறை காட்சிகள் இருக்கிறது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி குறைந்தபட்சம் யுஏ சான்றிதழாவது தாருங்கள் என்று மேல்முறையீடு செய்ய இருக்கிறார்களாம்.