இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வயகாம் 18 ஸ்டூடியோஸ், ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்திற்கு பிறகு தயாரிக்கும் படம் நித்தம் ஒரு வானம். ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளார், இதனை அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கி இருக்கிறார்.
அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா என 4 நாயகிகள் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காளிவெங்கட், அபிராமி, அழகம் பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார், கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ரா.கார்த்திக் கூறியதாவது: வாழ்வென்பதே பயணம் தான். தினமும் நம் மேலே இருக்கும் வானம் கலைந்து போகும் மேகம் போல, வாழ்வின் பயணம் நம்முள் ஏற்படுத்தும் தாக்கங்களை, மனதை கொள்ளை கொள்ளும் அழகான திரைக்கதையில் சொல்லும் படம்தான் 'நித்தம் ஒரு வானம். மூன்று காலகட்டங்களில் நிகழும் கதை. நான்கு நாயகிகள் என்றாலும் இது ரொமான்ஸ் படமாக அல்லாமல், அன்பையும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் பேசும் ஒரு அழகான கவிதையாக உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டில்லி, சண்டிகர், கோல்கட்டா, விசாகப்பட்டினம், ஐதராபாத், மதுரை, பொள்ளாச்சி என இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. என்றார்.