தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்தப்படத்தில் நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி உலக அளவில் 100 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தந்த வெற்றியால் தனுஷ் அடுத்தடுத்து தான் நடிக்க உள்ள படங்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளாராம். சுமார் ரூ.20 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .