தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இசை அரசி, இசைக்குயில்... என இன்னும் என்னனென்ன பட்டங்கள் கொடுக்க முடியுமோ அவை அனைத்திற்கும் பொருத்தமானவர் பாடகி பி.சுசீலா. பல்லாயிரம் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இவர் பத்மபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.தட்சணாமூர்த்தி ஆடிடோரியத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜி.ஆர்.கண்ணன் வழங்கும் "சுபம்" இசைகுழுவினரின் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்குகிறது. 54 ஆண்டுகளாக மேடைகளில் பாடி வரும் கண்ணனுக்கு பாராட்டு விழா இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு பி.சுசீலா தலைமை ஏற்கிறார்.
இந்த இன்னிசை நிகழ்ச்சியில் டி.எம்.எஸ் அவர்களின் மகன் பால்ராஜ், கோவை முரளி, டி.எல்.சங்கர்ராஜா, கே.வெங்கடேஷ், ஜி.கே.பார்த்திபன், ஜெய்ஸ்ரீ, உஷாராஜ், கல்யாணி கவுரி சங்கர், இசையமைப்பாளர் தீனா, மதன்பாப், ராஜேஷ் மயில்சாமி, அமிர்தா, ஜனனீ(மதன்பாப்) ஆகியோர் பங்கேற்று பாட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இருக்கையில் அமர முன்கூட்டியே வர வேண்டும் என விழாக்குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.