திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் தாயாரும் பிரபல சீனியர் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர் தற்போது முதன்முறையாக டுவிட்டர் பக்கத்தில் தனது புதிய கணக்கை துவங்கியுள்ளார். அதில் “டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி.. முதல் படமாக எனது அன்பு மகன் விஜய் உடன் இருக்கும் புகைப்படம்” என்று கூறி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ஷோபா சந்திரசேகர்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஷோபா சந்திரசேகர் இயக்குனராகவும் மாறி சில படங்களை இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமயத்தில் அதை பக்குவமாக கையாண்ட ஷோபா சந்திரசேகர், இப்போது டுவிட்டரில் நுழைந்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் எழுப்பி உள்ளது.