இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி , அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து இருக்கிறார். நேற்று முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். மாநாடு படத்திற்கு பிறகு தமிழில் மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ். ஜே. சூர்யா, ஆர்.சி-15 படத்திலும் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் எஸ். ஜே .சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.