இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிக்பாஸ் வெற்றியாளரான ராஜூ பாய் நெட்டிசன்களிடம் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரன்பீர் கபூர், ராஜமவுலி, நாகர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராஜூ ஜெயமோகன் ரன்பீருக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் சென்னை, மதுரை, கோயும்புத்தூர் வட்டார மொழிகளை பேச கற்றுக் கொடுத்தார்.
அப்போது அவர் சென்னை வட்டார வழக்கு பற்றி பேசும் போது சென்னை மக்களை இழிவுப்படுத்தும் தோரணையில் இருந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து ராஜூவை சோஷியல் மீடியாவில் பலரும் திட்ட ஆரம்பித்தனர். பிரச்னையை புரிந்து கொண்ட ராஜூ 'நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்காக வருந்துகிறேன். இரிடேட் ஆக வேண்டாம். மன்னிக்கவும்' என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, அந்த காணொளியில் சென்னை மக்கள் எப்போதும் இரிடேட்டடாக இருப்பார்கள் என்று சொல்லியதற்கு தான் பலரும் அவரை விமர்சித்தனர். இப்போது மீண்டும் இரிடேட் ஆக வேண்டாம் என ராஜூ சொல்லியிருப்பது விமர்சப்பிவர்களை கிண்டலடிக்கும் தொனியில் இருப்பதாக ராஜூவை மேலும் விமர்சித்து வருகின்றனர்.