50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
தமிழில் மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரெஜினா. தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் இவர் நடிக்கிறார். தற்போது நிவேதா தாமஸ் உடன் இணைந்து இவர் சாகினி தாகினி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தபடம் நாளை(செப்.,16) வெளியாக உள்ளது. இதற்காக பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டார் ரெஜினா. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண்களையும், நூடுல்ஸ் குறித்து இரட்டை அர்த்த காமெடி வசனம் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் தனது முதல் உதட்டு முத்தம் அனுபவம் குறித்து பேசி உள்ளார் ரெஜினா. அவர் கூறுகையில், ‛‛ஒரு சமயம் ஒரு பெண் திடீரென எனது உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன். பெண் என்பதால் நான் அவரை தள்ளிவிடவில்லை. ஒருவேளை ஆணாக இருந்திருந்தால் கண்டிப்பாக அறைந்திருப்பேன்'' என்கிறார் ரெஜினா.