விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் |
தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர் மயில்சாமி. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‛‛சாதி, மதம், பேதம் பார்க்காமல் தர்மம் செய்ய வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே சரியாக இருக்கும். இந்து, முஸ்லீம், கிறிஸ்து என மதங்களை பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. இதில் ஒருவர் வேண்டாம் என பிரித்து பார்ப்பவர் மனிதனே கிடையாது. மூன்று பேரும் சேர்ந்து இருப்பது தான் இந்தியா. ஓட்டுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள். திருப்பி பதிலடி கொடுப்பார்கள். எந்த உலகத்திற்கு சென்றாலும் உழைப்பு தான் முக்கியம், மொழி அல்ல'' என்றார்.