பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெய்குமாரி. உறவினர்களும், பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தனித்துவிடப்பட்ட தனக்கு அரசு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து ஜெய்குமாரிக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று ஜெய்குமாரியை சந்தித்தார். அங்கு அவருக்கு நல்ல முறையில் உயர்சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகளை செய்தார். அவருக்கு பண உதவி செய்த அமைச்சர், முதியோர் உதவி தொகை வழங்கவும் ஏற்பாடு செய்தார்.