ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெய்குமாரி. உறவினர்களும், பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தனித்துவிடப்பட்ட தனக்கு அரசு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து ஜெய்குமாரிக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று ஜெய்குமாரியை சந்தித்தார். அங்கு அவருக்கு நல்ல முறையில் உயர்சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகளை செய்தார். அவருக்கு பண உதவி செய்த அமைச்சர், முதியோர் உதவி தொகை வழங்கவும் ஏற்பாடு செய்தார்.