தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது. 1930-40 காலக்கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தில் உருவாகிறது. இதற்காக நீண்ட தலைமுடி, தாடி என உலா வருகிறார் தனுஷ். இது தொடர்பான போட்டோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இருதினங்களுக்கு முன் மாநகரம் பட புகழ் சந்தீப் கிஷான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது நாயகியாக பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார். தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகமாகி எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்தார் பிரியங்கா. அடுத்து தனுஷ் உடன் நடிக்கிறார்.
இதுபற்றி பிரியங்கா கூறுகையில், ‛‛இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் தனுஷ் உடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. படப்பிடிப்பு துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்கிறார்.